23 December 2011
ஆப்பிரிக்க நாட்டின் நமீபியாவில் விண் வெளியில்இருந்து இரும்பு குண்டு ஒன்று விழுந்தது
ஆப்பிரிக்க
நாடான நமீபியாவில் விண்வெளியில் இருந்து இரும்பு குண்டு ஒன்று விழுந்தது.
தலைநகர் வின்ட்கோயக்கில் இருந்து 750 கி.மீற்றர் தூரத்தில் உள்ள ஒரு
கிராமத்தில் விழுந்த அந்த இரும்பு குண்டு 1.1 மீற்றர் அதாவது 43 இஞ்ச்
நீளமும், 35 செ.மீட்டர் அகலமும் கொண்டது.இந்த குண்டின் எடை 6 கிலோ இருந்தது. இரு அரை வட்டங்கள் வெல்டிங் செய்து ஒட்ட வைக்கப்பட்டிருந்தது. அந்த குண்டு விழுந்ததால் பூமியில் 3.8 மீற்றர் அகலத்தில் 33 செ.மீற்றர் ஆழம் ஏற்பட்டது.
இந்த குண்டு எங்கிருந்து எப்படி விழுந்தது என தெரியவில்லை. எனவே, இது குறித்து நாசா, மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு கடந்த நவம்பர் மாதம் மத்தியில் விண்ணில் இருந்து விழுந்தது.
இரும்பினால் ஆன இந்த குண்டினால் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. வெடிக்கக்கூடிய தன்மையற்றதாக அது இருந்ததாக விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி வில்கோ தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று விண்வெளியில் இருந்து குண்டுகள் விழுந்துள்ளன.
Labels:
Magazine,
செய்திகள்,
தகவல்,
படித்தவைகள்
22 December 2011
மனிதர்களிடையே பறவை காய்ச்சல் வைரசை பரப்ப தீவிரவாதிகள் சதி
பறவை
காய்ச்சல் நோய் மனிதர்களுக்கு இடையே பரவுவது கிடையாது. எனினும் கடந்த
1997ம் ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு அந்த நோய் பரவியதில் 600-க்கும்
மேற்பட்டோர் பலியாகினர்இந்த நிலையில் பறவை காய்ச்சல் வைரஸ்(H5N1) மூலமாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
எனவே பறவை காய்ச்சல் தொடர்பான புதிய ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் விபரங்கள் எதையும் வெளியிட வேண்டாம். அவ்வப்போது வெளியாகும் அவற்றை பிரதி எடுத்து புதிய ஆய்வுகளை தீவிரவாதிகள் மேற்கொள்ளக் கூடும் என அமெரிக்காவை சேர்ந்த இரண்டு முக்கிய அறிவியல் ஆய்வு பத்திரிகைகளுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
இதற்கிடையே ஹாங்காங்கில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. ஹாங்காக் நகரில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் இறந்த கோழியின் உடலில் H5N1 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே கோழிப்பண்ணையில் உள்ள 17 ஆயிரம் கோழிகளை அழிக்க அரசு உத்தரவிட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ணைகளில் இருந்து உயிருடன் கோழிகளை இறக்குமதி செய்வதை 21 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் ஹாங்காங் அறிவித்துள்ளது
Labels:
செய்திகள்
'புகுஷிமா அணு உலையை சரி செய்ய 40 ஆண்டுகள் தேவைப்படும்'
புகுஷிமா அணு உலையை சரி செய்ய 40 ஆண்டுகள் தேவைப்படும் என்று ஜப்பான் அமைச்சர் கோஷி ஹோசனே தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய் இன்னும் 40 ஆண்டுகளும், இந்திய மதிப்பில் சுமார் ரூ.78,400 கோடியும் தேவைப்படும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் கோஷி ஹோசனே கூறுகையில், இந்த அணு உலையில் சிக்கியுள்ள கதிரியக்கக் குணம் கொண்ட எரிபொருளை சுற்றுப்புறத்துக்கு ஆபத்து இல்லாமல் எப்படி அப்புறப்படுத்துவது என்பதற்கான வழிகளை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
உலையிலிருந்து எரி கலத்தின் அடிப்புறத்துக்குச் சென்றுவிட்ட எரிபொருளை வெளியே கொண்டு வருவதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்யவே 10 ஆண்டுகள் பிடிக்கும்.அதைச் செய்வதற்கும் இயந்திர மனிதர்களை இனிமேல்தான் தயாரிக்க வேண்டும்.
புகுஷிமா அணு உலையால் ஏற்பட்ட கதிரியக்க ஆபத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் மறைந்துவிடாது. ரூ.78,400 கோடி என்பது எரிபொருளை வெளியே எடுக்க மட்டும்தான்.பிற செலவுகளும் காத்திருக்கின்றன என அவர் மேலும் கூறினார்.
ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய் இன்னும் 40 ஆண்டுகளும், இந்திய மதிப்பில் சுமார் ரூ.78,400 கோடியும் தேவைப்படும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் கோஷி ஹோசனே கூறுகையில், இந்த அணு உலையில் சிக்கியுள்ள கதிரியக்கக் குணம் கொண்ட எரிபொருளை சுற்றுப்புறத்துக்கு ஆபத்து இல்லாமல் எப்படி அப்புறப்படுத்துவது என்பதற்கான வழிகளை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
உலையிலிருந்து எரி கலத்தின் அடிப்புறத்துக்குச் சென்றுவிட்ட எரிபொருளை வெளியே கொண்டு வருவதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்யவே 10 ஆண்டுகள் பிடிக்கும்.அதைச் செய்வதற்கும் இயந்திர மனிதர்களை இனிமேல்தான் தயாரிக்க வேண்டும்.
புகுஷிமா அணு உலையால் ஏற்பட்ட கதிரியக்க ஆபத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் மறைந்துவிடாது. ரூ.78,400 கோடி என்பது எரிபொருளை வெளியே எடுக்க மட்டும்தான்.பிற செலவுகளும் காத்திருக்கின்றன என அவர் மேலும் கூறினார்.
Labels:
செய்திகள்
21 December 2011
அறிக்கை : இந்தியா மௌனம் அமெரிக்கா குப்பையில் வீசியது
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் ஆணைக்குழுவின் நல்லிணக்கத்துக்கான அறிக்கையை அமெரிக்காவும் நிராகரித்துள்ளது. சர்வதேச ரீதியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு முழுமையாகப் பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை அமையவில்லை என்று அது தெரிவித்துள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் முழுமையான பதில் அளிக்கப்படவில்லை” என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விக்ரோரியா நூலன்ட் அம்மையார் தெரிவித்தார். ஆணைக்குழுவின் அறிக்கை அர்த்தமற்றது என்று கூறி தமிழர்கள் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே நிராகரித்துள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இந்த அறிக்கை பக்கச்சார்பானது, முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தத் தவறியுள்ளது என்று கூறி நிராகரித்துள்ளன. இந்த நிலையிலேயே அமெரிக்காவின் கருத்தும் வெளியாகி உள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து மேலும் முழுமையாகப் பதிலளிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளது. வோஷிடங்னில் செய்தியாளர்களிடம் பேசிய பேச்சாளர் விக்ரோரியா நூலன்ட்அம்மையார் தெரிவித்ததாவது: நல்லிணக்க ஆணைக்குழு ஊடக சுதந்திரம், நல்லிணக்கம், அதிகாரப்பகிர்வு, படைக்குறைப்பு, காணாமற்போதல்கள் போன்ற விடயங்களில் சில உருப்படியான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அதேவேளை, நாங்கள் முழுமையான அறிக்கையை ஆய்வு செய்கிறோம். ஆனாலும், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு இந்த அறிக்கையில் முழுமையாகப் பதிலளிக்கப்படவில்லை என்பதை நாம் கூறியேயாக வேண்டும். குற்றச்சாட்டுக்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கான விரிவான திட்டம் ஒன்றை முன்வைக்க ஆணைக்குழு தவறியுள்ளதால், உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறல் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது. அறிக்கை முழுமையாக இல்லாது போனாலும், இந்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசிடம் நாம் கேட்டுக் கொள்கிறோம். இலங்கையர்கள் இந்த விவகாரங்களில் முழுமையாகப் பதிலளிக்க வேண்டும் என்பதையே நாங்கள் நீண்டகாலமாகக் கூறி வருகிறோம் என்றார் அவர்.அதேவேளை, இலங்கை மீது அனைத்துலக விசாரணை தேவைப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த விக்ரோரியா நூலன்ட், “அவர்கள் முன்னோக்கிச் செல்கிறார்களா என்று பார்ப்போம்” என்று பதிலளித்துள்ளார். ஆனால், ஆணைக்குழுவின் அறிக்கையில் நம்பிக்கையீனத்தை வெளியிட்டுள்ள தமிழ்க் கட்சிகளும் மனித உரிமை அமைப்புக்களும் சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றே அவசியம் என்று கூறியுள்ளது.
----- நன்றி :- அலைகள் இ-செய்திகள்
பெட்ரோல் விலை:
பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்! சிறப்பு ஆய்வு கட்டுரை!
மோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது ”அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களே” என்று தான்.
இதில் நாமும் விதிவிலக்கல்ல..
ஏனெனில் கடந்த ஓராண்டில் மட்டும் 10 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் பெட்ரோல் விலை 5.12 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 68.35 ரூபாய்க்கு தமிழகத்தில் பெட்ரோல் விற்கப்படுகின்றது.
பிரதமர் உட்பட உயர் மட்ட அளவில் கூட்டம் போடும் அளவிற்கு நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ள இந்த நிலையில், நமது இந்திய அரசு இதை (எண்னை நிறுவனங்கள் அரசின் ஒப்புதலுடன் தான் விலையை ஏற்றுகின்றது) செய்திருப்பது, ”நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை தங்களுக்கு கோடிகோடியாய் பணம் தரும் பெரும் தொழிலதிபர்கள் நல்லா இருக்கனும் உலகின் பணக்கார பட்டியலில் அவர்கள் பெயர் முன்னேர வேண்டும்” என்ற அரசியல் வாதிகளின் நயவஞ்சகத்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
நாம் இதை ஆதாரத்தோடே கூறுகின்றோம்!
விலையை உயர்த்து சொல்லப்படும் காரணங்கள்
1.ஆயில் நிறுவனங்களுக்கு நஷ்டம்
அடிக்கடி விலையை உயர்த்துவதற்கு அரசு சொல்லும் முதல் காரணம் ஆயில் நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு ”இத்தன கோடி நஷ்டம்” என்பது தான்.
இது கடைந்தெடுத்த பொய்யாகும்! இது பச்சைப் பொய்யாகும்!! இது மகாப் பொய்யாகும்!!
நாம் இதை இவ்வளவு அழுத்தமாக சொல்லக் காரணம், அரசு எந்த நிறுவனங்களை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றதோ அந்த எண்னை நிறுவனங்களின் (IOC -Indian Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat Petroleum Corporation) 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை நாம் படித்தது தான்.
நிதி நிலை அறிக்கை (நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம்)
IOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 5294 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 832.27 கோடி
5294 + 832.27 = 6126.27 கோடி லாபம்
HPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 90.90 கோடி
2142.22 + 90.90 = 2233.12 கோடி லாபம்
BPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 198.00 கோடி
2142.22 + 198.00 = 2340.22 கோடி லாபம்
மேற்குறிப்பிட்ட மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் மட்டும் நான்கு மாதத்தில் கிட்டதட்ட 10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டு, எண்ணை ‘நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளோம்’ என்று அப்பட்டமாக பொய் கூறி பொதுமக்களை மத்திய அரசு ஏமாற்றுகின்றது.
நஷ்டம் என்று அரசு கூறுவது ‘வர வேண்டிய லாபத்தை என்று’ சில பொருளாதார வல்லுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.
அதாவது உதாரணத்திற்கு: 2000 கோடி லாபம் வர வேண்டும் ஆனால் 1500 கோடி தான் லாபம் வந்துள்ளது எனவே 500 கோடி இலாபம் குறைந்துள்ளது என்று ஒருவர் கூறுவது போன்று.
லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கும் ”விலையை கூட்டும் அளவிற்கு இத்தன கோடி நஷ்டம் ” என்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது.
பொதுமக்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும் போது கோடிக்கணக்கில் எண்னை நிறுவனம் மூலம் லாபம் சம்பாத்தித்து விட்டு ‘அதுவும் போதவில்லை இன்னும் விலையை ஏற்று’ என்று மத்திய அரசு கூறுவது, அரசு எந்த அளவிற்கு பொதுமக்களின் பணத்தை கொள்கை அடிக்க வழிகளை தேடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.
நான்கு மாதத்தில் மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் 10 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிவிட்டு, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நஷ்டக் கணக்கு காட்டி, பெட்ரோல் விலையை கூட்டவது நியாயமான அரசு செய்யும் வேலையா?
எனவே அரசுக்கு எண்னை நிறுவனங்கள் மூலம் இதுவரையிலும் எந்த நஷ்டமும் இல்லை மாறாக கொடிக்கணக்கில் லாபம் தான், மத்திய அரசு அப்பட்டமாக பொய் கூறுகின்றது என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
நஷ்ட கணக்கு நாடகத்தை பொதுமக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.
2. குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது
அடுத்து சொல்லும் காரணம் குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது. இதுவும் பொய்யாகும்.
தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்றது. தற்போது பெட்ரொலின் விலை லிட்டர் 63.54 ரூபாய்.
ஆனால் இதே பீப்பாய் 2008 ஆம் ஆண்டில் கிட்டதட்ட 135 டாலருக்கும் மேல் விற்கப்பட்டது. அப்போது விலை என்ன தெரியுமா ? பெட்ரொல் லிட்டர் ரூபாய் 54 மட்டும் தான்.
2008 ஐ ஒப்பிடும் போது தற்போது பீப்பாய் விலை 34 சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையையும் 34 சதவிகிதம் குறைக்க வேண்டும். அது தான் நியாயம் அதாவது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூ ஆக ஆக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு குறைப்பதற்கு பதிலாக தற்போது 55 சதவிகிதம் விலைய உயர்த்தி 63 ரூபாய்க்கு விற்கின்றது.
இது மிகப்பெரும் அநியாயமாகும்.
2008 ல் பீப்பாய் ஒன்று 135 டாலருக்கும் மேல் சர்வதேச சந்தையில் விற்கும் போதே பெட்ரோலை லிட்டர் 54 ரூபாய் தான். ஆனால் தற்போது பீப்பாய் ஒன்று 92 டாலர் தான் விற்கின்றது எனவே பீப்பாய் விலையை கவனத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு விலைய குறைக்க வேண்டுமே தவிர கூட்டக் கூடாது.
எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு குரூட் ஆயிலின் விலை உயர்வு தான் காரணம் என்று கூறுவது பொய் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
விலை உயர்ந்துள்ளதற்கு உண்மையான காரணம்
உண்மையில் தற்போது உள்ள சந்தை நிலவரப்படி கணக்கு பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் கூட வராது.
ஆம், நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்கு மேல் உள்ள தொகை மத்திய மாநில அரசு விதித்துள்ள வரிகள் தான்.
இதோ தற்போதைய பெட்ரோலுக்கான வரி நிலவரம் 2011
வரி என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்
22 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 41 ரூபாய் கூடுதலாக வரிமேல் வரி விதித்து 63.45 க்கு அநியாயமாக விற்கும் மத்திய மாநில அரசுகள் இன்னும் என்ன காரணம் சொல்லி விலையை உயர்த்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றது. பொய்கணக்கு கூறி பொதுமக்களிடம் நாடகமாடிக்கோண்டிருக்கின்றது.
ஒரு வருடத்திற்கு நாம் அரசிற்கு செலுத்தும் பெட்ரோல் வரி .. ஒரு சிறிய கணக்கு..
மோட்டார் வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 15 லிட்டர் பயன்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
மாதம் பெட்ரோலுக்காக இவருக்கு ஆகும் செலவு ரூபாய் 951.75.
இதில் 650.7 ரூபாயை இவர் அரசுக்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார். பெட்ரோலுக்கான விலை அல்ல!
இதில் பெட்ரோலுக்கான விலை வெறும் 330 ரூபாய் மட்டும் தான்!
மாதம் 650.7 எனில் வருடத்திற்கு 7808.4 ரூபாயை இவர் பெட்ரொல் வாங்குவதன் மூலம் அரசிற்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார்.
நானும் நீங்களும் பெட்ரோலுக்காக அரசிற்கு வருடா வருடம் கிட்டதட்ட 8 ஆயிரம் ரூபாய் வரியாக மட்டுமே கொடுக்கின்றோம். (மாதம் 15 லிட்டர் எனில்) இது தெரியுமா உங்களுக்கு ?.
இதில் 4 ஆயிரம் தமிழக அரசிற்கு, 4 ஆயிரம் மத்திய அரசிற்கு! என்ன கொடுமை இது!!!
100 கோடி மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் மோட்டார் வாகனம் பயன்படுத்தவதாக வைத்துக் கொண்டாலும் அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 780840000000 (எத்தன ஆயிரம் கோடின்னு நீங்களே கணக்கு பன்னிக்கோங்க) பெட்ரோல் மூலம் வரி மட்டுமே வருகின்றது.
ஒரு பக்கம் எண்ணை நிறுவனங்கள் மூலம் வரும் லாபம், மறு பக்கம் அதை விட இரண்டு மடங்கு வரி என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து வரும் லாபம்.
இவையெல்லாம் போதாது என்று மேலும் மேலும் பச்சை பொய் கூறி பெட்ரோல் விலைலை உயர்த்துகின்றது மத்திய அரசு.
எனவே பெட்ரோல் விலையின் உயர்வுக்கு காரணம் மத்திய மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள வரிகள் தானே தவிர பீப்பாய் விலையோ எண்னை நிறுவனிங்களின் நஷ்டமோ (அப்பட்டமான பொய்) கிடையாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கூடுதலாக வரி விதிக்க காரணம்
1. தனியார் நிறுவனங்கள்
சமீபகாலமாக அரசு அதிகமாக வரி விதிப்பதற்கும் விலைய உயர்த்துவதற்கும் முக்கிய காரணம் தற்போது முலைத்துள்ள தனியார் எண்னை நிறுவனங்கள் தான்.
கனிமவளங்கள் நிறந்த நாட்டுடமைகளை அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கி தனியார் எண்னை நிறுவனங்கள் அதிலிருந்து வரும் எரிபொருளை அரசிற்கே கூடுதல் விலைக்கு விற்கின்றது மேலும் வெளிநாட்டில் இருந்து பெட்ரோலை வாங்கி உள்ள நாட்டில் அதிக விலைக்கு விற்கின்றது.
ஆம்! பெட்ரோலுக்காக நாம் கொடுக்கும் பணத்தில் ரிலைன்சுக்கும் பங்கு செல்கின்றது. இது போன்ற தனியார் எண்னை நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் அரசு, பெட்ரோல் விலையை நீங்களே (எண்னை நிறுவனங்களே) நிர்ணயித்துக் கொள்ளுங்கள் என சட்டம் கொண்டு வந்தது.
இதனால் தான் தற்போது பெட்ரொல் விலை அடிக்கடி உயர்கின்றது.
Reliance Industries என்று சொல்லப்படும் ரிலைன்சின் எண்னை நிறுவனத்தின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் லாபம் (நான்கு மாதத்தில்) எவ்வளவு தெரியுமா? 4923 கோடியாகும்.
இந்த லாபம் அரசின் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகியவற்றின் லாபத்தை விட இரண்டு மடங்கு கூடுதலானதாகும்.
தனியார் நிறுவனங்கள் அரசிடமிருந்து கனிமவலளங்கள் நிறைந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதில் உள்ள எரிபொருளை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அரசிற்கே விற்கின்றன மேலும் வெளிநாட்டில் இருந்து வாங்கியும் அரசிற்கு விற்கின்றது.
இதை அரசே செய்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை, அரசிற்கு கூடுதல் லாபம் வரும் என்பதால் 65 சதவிகிதம் அளவிற்கு வரி விதிக்கவும் தேவையில்லை.
முகேஷ் அம்பானி போன்ற தனியார் நிறுவன தொழிலதிபர்கள் உலக பணக்கார வரிசையில் நான்காவது இடம் பிடிக்க நமது அரசியல் வாதிகள் பாடுபடுவதோடு பொதுமக்களையும் அதற்கு பணயமாக்குகின்றனர்.
2. வட்டி
65 சதவிகிதம் அளிவிற்கு வரி விதிப்பதற்கு மற்றுமொரு முக்கிய காணரம் உலக வங்கியில் இந்திய அரசு வாங்கியுள்ள கடன் தான்.
இத்தனை சதவிகிதம் வரி விதித்தால் தான் அரசின் கடன் மற்றும் வட்டியை கட்ட முடியும் என்ற கணக்கு உள்ளது.
அதன் அடிப்படையில் தான் வாங்கிய கடன் மற்றும் அதற்குரிய வட்டியை அடைப்பதற்கு ஏற்றாற்போன்று மத்திய மாநில அரசு வரிகளை விதிக்கின்றது.
பெட்ரோல் அன்றாடம் அனைவரும் பயன்படுத்தப்படும் பொருளாக இருப்பதால் அதற்கு கூடுதல் வரிகளை விதித்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க அரசு, வட்டி மற்றும் தனியார் கலாச்சாரத்தை கைவிட வேண்டுமே தவிர பொதுமக்களை சுரண்டும் வண்ணம் வரிக்கு மேல் வரி விதிக்கக் கூடாது.
அமெரிக்காக போன்ற வளர்ந்த நாட்டில் வெறும் 18 சதவிகித வரி தான் பெட்ரோலுக்கு விதிக்கப்படுகின்றது.
18% எங்கே 65% எங்கே ?
பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழக அரசும் காரணம்
மற்ற மாநிலங்களை விட அதிகமாக தமிழக அரசு 30 சதகவிதம் பெட்ரோலுக்கு வரி விதிக்கின்றது. ஒரு ரூபாய் க்கு அரிசி போடுகின்றேன் என்று கூறி தினமும் அன்றாடம் வேலைக்கு செல்லும் பொதுமக்களிடம் கோடி கோடியாய் பணத்தை பெட்ரோல் மூலம் சுருட்டுகின்றது இந்த தமிழக அரசு.
இந்த வரியை குறைக்குமாறு கலைஞரிடம் கேட்டதற்கு இதை குறைக்க முடியாது என்று சமீபத்தில் கூறியுள்ளார்.
இப்படி கோடிகோடியாய் பொதுமக்களிடமிருந்து வரி என்ற பெயரில் கொள்ளையடித்த பணத்தை தான் ஓட்டு வாங்குவதற்காக கூத்தாடிகளுக்கு ‘சொந்த இடம், சொந்த வீடு, படத்திற்கு வரி விலக்கு’ பொன்ற சலுகைகள் வழங்க பயன்படுத்துகின்றார் இந்த கருணாநீதி.
இதுவல்லாமல் பொதுமக்களுக்கு ‘அந்த திட்டம் இந்த திட்டம்’ என்று அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிடுகின்றார்.
மேலோட்டமாக சலுகைகளை அறிவித்து விட்டு பொதுமக்களுக்கு தெரியாமல் பெட்ரோல் மூலம் பணத்தை வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றது இந்த தமிழக அரசு.
பெட்ரோல் விலை உயர்வுக்கும் கலைஞருக்கும் சம்பந்தமே இல்லாததை போன்ற மாயத் தோன்றம் ஏற்படுத்தப்படுகின்றது.
மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் கூடுதலாகவே பெட்ரோலுக்கு வரி விதிக்கப்படுகின்றது.
போலி சலுகைகளை அறிவிப்பதை விட்டு விட்டு, வரி என்ற பெயரில் பொதுமக்கள் வயிற்றில் அடிக்காமல் தமிழக அரசு செயல்பட்டாலே போதும் என்பது பொதுமக்களின் கருத்து.
விலையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்ற நிலையிலும் வரி இல்லாமல் பெட்ரோலின் விலை வெறும் 22 ரூபாய் தான் ஆகின்றது.
இந்த 22 ரூபாயில் லாபமும் அடங்கும். வரி என்பது கூடுதலாக விதிக்கப்படுவது.
மத்திய மாநிலம் அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு வரி விதித்திருப்பதாலேயே பெட்ரோல் விலை தாருமாறாக உயர்ந்துள்ளது.
மத்திய மாநில அரசுகள் வரியை குறைத்தாலே போதும் பெட்ரோல் விலை குறைந்துவிடும். சர்வதே சந்தையில் குரூட் ஆயிலின் விலை கூடுவதினால் பெட்ரோல் விலை பெருமளவு கூடாது.
மத்திய அரசு வரியை குறைத்தால் தான் பெட்ரோல் விலை குறையும் என்பதில்லை தமிழக அரசு 30 சதவிகிதமாக இருக்கும் தற்போதை வரியை குறைந்த பட்சம் மற்ற மாநிலங்களை போன்று குறைத்தாலே போதும். பெட்ரோல் விலை கணிசமாக குறையும்.
பொதுமக்களாகிய நாம் தான் இதற்கு ஆவண செய்ய வேண்டும்!
அநியாயம்! அநியாயம்! எங்கும் இல்லாத அநியாயம்
20 ரூபாய் பொருளுக்கு 5 அல்லது 10 ரூபாய் வரி போட்டால் சகித்துக் கொள்ளலாம் ஆனால் கிட்டதட்ட 200 சதவிகித அளவிற்கு வரி போடும் அபாயகரமான நிலையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆம் 22 ரூபாய் பெட்ரோலுக்கு 41 ரூபாய் வரி!
ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட எந்த பொருளுக்கும் இந்த அளவிற்கு வரி விதித்திருக்க மாட்டார்கள்.
சமீப காலமாக ஏற்படும் விலை வாசி உயர்வுக்கு பெட்ரோல் விலை உயர்வும் முக்கிய காணரம்!
இதை கண்டு கொள்ளாமல்அரசு மெத்தனமாகவே செயல்படுகின்றது.
இதில் வேடிக்கையான விசயம் என்னவெனில் தற்போது உள்ள பிரதமர் பொருளாதார வல்லுணராம் அது தொடர்பாக நிறைய படித்துள்ளாராம். என்னத்த படிச்சாரோ தெரியல..
அரசியல் வாதிகள் ஆட்சியில் இருக்கும் பொது பெட்ரோலுக்கு தங்களது சொந்த பணத்தை செலவிட்டால் தானே அதன் கஷ்டம் புரியும், இவர்கள் பெட்ரோல் அலவன்ஸ் என்ற பெயரில் அரசின் பணத்தை தானே தங்களது வாகனத்திற்கு செலவிடுகின்றனர்.
எனவே பொதுமக்களின் கஷ்டம் இவர்களுக்கு எங்கு தெரியப்போகின்றது.
எனவே இந்த அநியாயத்தை பொதுமக்கள், தட்டி கேட்க தவறினால் 200 சதவிகிதம் என்ன, பெட்ரோலுக்கு 500 சதவிகிதம் கூட இவர்கள் வரி விதிப்பார்கள்.
-VaalgaTamilRam
Labels:
செய்திகள்
17 December 2011
100 கோடி வேணுமாம்…. !!!!
யாருக்கு 100 கோடி என்கிறீர்களா…. டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்குத்தான் 100 கோடி வேண்டுமாம். தமிழ்நாட்டில், தமிழனின் உழைப்பில் வியாபாரம் நடத்திப் பிழைக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் சென்னைப் பதிப்பு அலுவலகத்தில், மலையாளிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது, செய்திகளைத் தாண்டி, மலையாள வெறி தெரிகிறது என்று தி வீக்என்ட் லீடர் இணைய தளம் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.

அந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவமும், தமிழ் மொழிபெயர்ப்பும் சவுக்கில் சிறப்புச் செய்திகள் என்ற பகுதியில் தரப்பட்டுள்ளது.
இந்த செய்தியை உடனடியாக நீக்க வேண்டும் என்று கேட்டு, முதலில் வீக் என்ட் லீடர் இணைய தளத்திற்கு டைம்ஸ் ஆப் இந்தியா நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸ் பின்வருமாறு.
Sir/Madam
Sub: Legal Notice against article titled “Rising emotions, falling objectivity, the truth behind Mullaiperiyar coverage in Chennai newsrooms” written/ authored by Radhika Giri, correspondent on your website “theweekendleader.com” and selecting /approving by the Editor/ Owner.
Under instructions of my client Bennett, Coleman & Co. Ltd, owner of the newspaper The Times of India published in Chennai having its office at Times House, 126/127 Chamiers Road, Nandanam, Chennai-600 035 and registered office at The Times of India Building Dr. D.N. Road, Mumbai 400 001 and its corporate office at Times House, 7, Bahadur Shah Zafar Marg, New Delhi-110002; Mr Sunil Nair, Resident Editor, The Times of India Chennai; this legal notice is issued to you as under:-
1. At the outset we state that we have been shocked and surprised to come across this totally false and malicious article posted on your website on 05-Dec-2011 in Vol 2 Issue 48 at the website address:
Rising emotions, falling objectivity, the truth behind Mullaiperiyar coverage in Chennai newsrooms | Causes |
4. The said article is totally false, baseless and has been written and published as a part of greater conspiracy against my client and its newspaper, more specifically to hurt its image and business interests in the State of Tamil Nadu. It appears that my client’s business rivals conspiring with the author Radhika Giri, P.C Vinoj Kumar, editor of your website, senior officials/directors/owners/partners of website company with common intention have dragged my client into the controversy around the Mullaiperiyar dam in Kerala to defame it, incite mischief against it and hurt its business interests in Tamil Nadu.
5. By your said article you have provoked the general public to commit breach of peace, you have also promoted enmity and hatred between persons belonging to the State of Tamil Nadu and Kerala to the extent of inciting them to commit breach of peace and harmony in these and other places . In fact, serious imputations and assertions have been made in the said article specifically against my clients and generally which are grossly prejudicial to national integration. You have by the said article pitted the elite belonging to the forward castes against backward castes in Tamil Nadu, which is again done to further your nefarious designs.
6. My clients state that each and every sentence of the said article is false, baseless and defamatory and imputations made therein have been made maliciously with intent to tarnish the image of my client and its business interests, goodwill in the State of Tamil Nadu. Your allegations as to “Times View” published on 24/11/2011 in The Times of India edition wherein Mullaperiyar is not spelled as Mullaipervar, as persons in the state of Tamil Nadu would refer to it, and inferences drawn from it, that The Times of India, Chennai favors Kerala on the dam issue is totally exaggerated, baseless and nothing but malicious falsehood. The author of the article Radhika Giri or its Editor and Owner P.C Vinoj Kumar have not tried to cross-check as to what is the view of my client’s newspaper on the issue but unilaterally published this wholly false and baseless article, in a reckless manner, without any regard for truth or responsibility towards the State/(s)/Nation. The whole article is nothing but piece of malicious and malafide design made/written with an intent to cause mischief.
7. My clients state that the said article, imputations and false statements therein amount to defamation and have been made with an intent to harm/ tarnish the reputation of my clients. My clients state that the first among the above named is the Author of the news article and the second among the above is the Editor of news Website and last is the Owner of the legal entity owning the website and are all jointly and severally liable for the publication of impugned article and consequences thereof.
8. My clients state that the content of the said article have been widely read by the public in Tamil Nadu and rest of India wherever the said website is available through internet thereby causing a lot of disrepute, harm, loss of reputation in the eyes of general public/ persons. The management, staff and employees of my clients have also suffered a lot of mental agony and have been exposed to harm by mischievous persons who have been/ are being incited by publication of the said article and its presence/being hosted on your website.
9. My clients state that by publishing the said article on your website you have committed offences under the Indian Penal Code and have also rendered yourself liable for payment of compensation/damages/loss for the tortious acts committed by you in making, publishing, hosting and circulating the defamatory/mischievous article against my clients.
My clients hereby call upon you (1) to immediately/ within 12 hours remove the said article from your website (2) to cease and desist from publishing defamatory/mischievous materials against my clients in any manner whatsoever in your website or otherwise (3) to immediately/within 12 hours tender an unconditional apology prominently on your website (4) pay to my client a sum of Rs. One Crore as compensation / damages within 7 days from the receipt of this notice. Failing as above my clients shall be constrained to initiate legal action against you all for the recovery of compensation/ damages jointly and severally and also prosecute you for offences committed by you under the Indian Penal Code.
Anshul Saharan
Manager Legal
தற்போது, டைம்ஸ் ஆப் இந்தியா 100 கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டு, மற்றொரு நோட்டீஸை தி வீக்என்ட் லீடர் இணைய தளத்திற்கு அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸ் பின்வருமாறு
Sir/Madam
Sub: Legal Notice against article titled “Rising emotions, falling objectivity, the truth behind Mullaiperiyar coverage in Chennai newsrooms” written/ authored by Radhika Giri, correspondent on your website“theweekendleader.com” and selecting /approving by the Editor/ Owner.
Under instructions of my client Bennett, Coleman & Co. Ltd, owner of the newspaper The Times of India published in Chennai having its office at Times House, 126/127 Chamiers Road, Nandanam, Chennai-600 035 and registered office at The Times of India Building Dr. D.N. Road, Mumbai 400 001 and its corporate office at Times House, 7, Bahadur Shah Zafar Marg, New Delhi-110002; Mr Sunil Nair, Resident Editor, The Times of India Chennai; this legal notice is issued to you as under:-
1. At the outset we state that we have been shocked and surprised to come across this totally false and malicious article written with ulterior motive and malicious intent posted on your website on 05-Dec-2011 in Vol 2 Issue 48 at the website address:
Rising emotions, falling objectivity, the truth behind Mullaiperiyar coverage in Chennai newsrooms | Causes |
3. My clients are receiving messages from their readers spread all over India/ Abroad and particularly in Delhi saying that they hold the newspaper its editor, correspondents in high esteem and after reading this article on net their reputation has fallen in their eyes and now they look at every news published in newspaper with suspicion. After reading the said defamatory and mischievous article on your said website my clients reputation has been lowered in the eyes not only of the readers but also in media circles both in India and Abroad.
4. You are aware that my client’s newspaper The Times of India is known for its journalistic ethics and fair reporting. The said newspaper is being published and circulated throughout India and is known for its patriotism and nationalistic outlook. My client’s newspaper/ publications has/have never indulged in any manner in regionalism or casteism but has/have always reported fairly on issues of great public interest or concern.
5. My client has always followed the policy of promoting merit amongst its employees and it is for this reason that persons from one state head departments and positions in other states. My clients were pained and shocked to come across the said article on your website wherein a certain section of my client’s employees are painted/alleged to be favoring a certain party/ state on a regional issue which is far away from truth and smacks of ulterior motive and malafide intent .
6. The said article is totally false, baseless and has been written and published as a part of greater conspiracy against my client and its newspaper, more specifically to hurt its image and business interests in the State of Tamil Nadu. It appears that my client’s business rivals conspiring with the author Radhika Giri, P.C Vinoj Kumar, editor of your website, senior officials/directors/owners/partners of website company Tristar Enterprises with common intention and ulterior motives have dragged my client into the controversy around the Mullaiperiyar dam in Kerala to defame it, incite mischief against it and hurt its business interests in Tamil Nadu.
7. By your said article you have provoked the general public to commit breach of peace, you have also promoted enmity and hatred between persons belonging to the State of Tamil Nadu and Kerala to the extent of inciting them to commit breach of peace and harmony in these and other places. In fact, serious imputations and assertions have been made in the said article specifically against my clients and generally which are grossly prejudicial to national integration and peace in these two states. You have by the said article pitted the elite belonging to the forward castes against backward castes in Tamil Nadu, which is again done to further your nefarious designs.
8. My clients state that each and every sentence of the said article is false, baseless and defamatory and imputations made therein have been made maliciously with intent to tarnish the image of my client and its business interests, goodwill in the State of Tamil Nadu. Your allegations as to “Times View” published on 24/11/2011 in The Times of India edition wherein Mullaperiyar is not spelled as Mullaiperyar, as persons in the state of Tamil Nadu would refer to it, and inferences drawn from it, that The Times of India, Chennai favors Kerala on the dam issue is totally exaggerated, baseless and nothing but malicious falsehood. The author of the article Radhika Giri or its Editor P.C Vinoj Kumar have not tried to cross-check as to what is the view of my client’s newspaper on the issue but unilaterally published this wholly false and baseless article, in a reckless manner, without any regard for truth or responsibility towards the State/(s)/Nation. The whole article is nothing but piece of malicious and malafide design made/written with an intent to cause mischief and harm to my clients.
9. My clients state that the said article, imputations and false statements therein amount to defamation and are written with an intent to harm/ tarnish the reputation of my clients and have grossly defamed my clients. My clients state that the first among the above named is the Author of the news article and the second among the above is the Editor of news Website and last is the Owner of the legal entity owning the website and are all jointly and severally liable for the publication of impugned article and consequences thereof.
10. My clients state that the content of the said article have been widely read by the public in Tamil Nadu, Maharashtra, Delhi and rest of India wherever the said website is available through internet thereby causing a lot of disrepute, harm, loss of reputation in the eyes of general public/ persons. The management, staff and employees of my clients have also suffered a lot of mental agony and have been exposed to harm by mischievous persons who have been/ are being incited by publication of the said article and its presence/being hosted on your website.
11. My clients state that by publishing the said article and in a most brazen manner continuing with such action even after having been put to notice by my clients you have continued and are still continuing with your action whereby you have committed offences under the Indian Penal Code and have also rendered yourself liable for payment of compensation/damages/loss for the tortious acts committed by you in making, publishing, hosting and circulating the defamatory/mischievous article against my clients.
My clients hereby call upon you (1) to immediately/ within 12 hours remove the said article from your website (2) to cease and desist from publishing defamatory/mischievous materials against my clients in any manner whatsoever in your website or otherwise (3) to immediately/within 12 hours tender an unconditional apology prominently on your website (4) pay to my client a sum of Rs. One Hundred Crore as compensation / damages within 7 days from the receipt of this notice. Failing as above my clients shall be constrained to initiate legal action against you all for the recovery of compensation/ damages jointly and severally and also prosecute you for offences committed by you under the Indian Penal Code.
Copy of this notice is been kept in my office for future action if any.
Yours truly,
Shailendra Singh
Advocate
ஒரு இணையதளத்தில் தவறான செய்திகள் வந்திருந்தால், அந்தச் செய்திகளுக்கு எதிர்ப்பும் மறுப்பும் தெரிவிப்பது ஒவ்வொரு தனிநபர் மற்றும் நிறுவனங்களில் உரிமை. அந்தச் செய்தியில் உள்ளவை பொய், அதற்கு மறுப்பு போடுங்கள் என்று கேட்டு அதற்கு செய்தி வெளியிட்ட நிறுவனம் மறுப்பு வெளியிட மறுத்தால் பிறகு வக்கீல் நோட்டீஸ் அனுப்பலாம். எடுத்த எடுப்பில் ஒரு கோடி ரூபாய் கொடு என்று மிரட்டி விட்டு, மிரட்டலுக்கு பணியவில்லை என்றதும் 100 கோடி ரூபாய் கொடு என்று கேட்டு மிரட்டுவது, இணையதளத்தில் உள்ள கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகவே சவுக்கு பார்க்கிறது.
தி வீக் என்ட் லீடர் வெளியிட்டுள்ள கட்டுரையையும் நேற்று இது குறித்து சவுக்கு வெளியிட்ட கட்டுரையையும் படித்துப் பார்த்தீர்களென்றால், டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை பதிப்பு எப்படி மலையாளிகள் ஆதிக்கத்தில் திளைத்து, இதனால் நடுநிலை தவறியதோடு அல்லாமல், உண்மையை திரித்து, மலையாளிகளின் நலனை முன்நிறுத்துகிறது என்பது தெளிவாக விளங்கும்.
டைம்ஸ் ஆப் இந்தியாவை நடத்தும் அதே பென்னட் அன்ட் காலமென் நிறுவனம்தான் டைம்ஸ் நவ் சேனலையும் நடத்துகிறது. இந்த பென்னட் அன்ட் காலமன் நிறுவனத்துக்கு சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்றம் ஒரு நீதிபதியின் புகைப்படத்தை தவறாக காண்பித்ததற்காக 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது பென்னட் அன்ட் காலமன் நிறுவனம். ஆனால் உச்ச நீதிமன்றம் 100 கோடியை கட்டுங்கள் பிறகு மேல் முறையீடு செய்யுங்கள் என்று உத்தரவிட்டது.
உடனே டைம்ஸ் ஆப் இந்தியா, பத்திரிக்கை சுதந்திரம் பறிபோய் விட்டது என்று குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டது. உடனடியாக எடிட்டர்ஸ் கில்ட் என்ற பத்திரிக்கையாளர் அமைப்பையும், பவுன்டேஷன் ஆப் மீடியா ப்ரொபெஷனல்ஸ் என்ற அமைப்பையும் வைத்து இந்தத் தீர்ப்பை கண்டித்து அறிக்கை வெளியிட வைத்து, இதை டைம்ஸ் ஆப் இந்தியாவில் பெரிய செய்தியாக வெளியிட்டது. இந்தத் தீர்ப்பை கண்டித்த மற்றொரு பத்திரிக்கையாளர் அமைப்பு BEA என்று அழைக்கப் படும் ப்ராட்காஸ்ட் எடிட்டர்ஸ் அசோசியேஷன். இந்த அமைப்பின் துணைத் தலைவராக இருப்பவர் டைம்ஸ் ஆப் இந்தியாவின் எடிட்டர் அர்நாப் கோஸ்வாமி என்பது குறிப்பிடத் தக்கது.

பத்திரிக்கையாளர் சங்கங்கள், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பத்திரிக்கைச் சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் தடுக்கும் செயல். இது ஜனநாயகத்தையே கடும் பாதிப்புக்குள்ளாக்கும் என்று பெரிய செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டது. உச்ச நீதிமன்றம் டைம்ஸ் நவ் சேனலை 20 கோடி கட்ட வேண்டும், 80 கோடிக்கு வங்கி உத்தரவதம் வழங்க வேண்டும் என்று அளித்த உத்தரவு வெளிப்பார்வைக்கு அநியாயமாகத் தோன்றும். ஆனால் இந்த விஷயத்தில் நடந்தது என்னவென்று தெரிந்து கொண்டால், 100 கோடி குறைவு என்பது தெரியும்.
10 செப்டம்பர் 2008 அன்று டைம்ஸ் நவ் சேனல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் பி.கே.சமந்தா என்ற நீதிபதி, ப்ராவிடன்ட் பண்ட் ஊழலில் சம்பந்தப் பட்டிருக்கிறார் என்று ஒரு செய்தி ஒளிபரப்பியது. அந்த ஒளிபரப்பின் போது, நீதிபதி சமந்தாவின் புகைப்படத்திற்கு பதிலாக, உச்ச நீதிமன்ற நீதிபதி சாவந்த்தின் புகைப்படத்தை ஒளிபரப்பியது. இது ஒளிபரப்பான உடனேயே நீதிபதி சாவந்த், தனது உதவியாளர் மூலமாக டைம்ஸ் நவ் சேனலுக்கு இந்தத் தவறை சுட்டிக் காட்டுகிறார். ஆனால் எவ்விதமான மறுப்பும் ஒளிபரப்பவில்லை.
15 செப்டம்பர் 2008 அன்று நீதிபதி சாவந்த், டைம்ஸ் நவ் சேனலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார். இந்தக் நோட்டீஸ் டைம்ஸ் நவ் சேனலுக்கு 18 செப்டம்பர் அன்று கிடைக்கிறது. இறுதியாக 23 செப்டம்பர் 2008 அன்று, 13 நாட்கள் கழித்து, டைம்ஸ் நவ் சேனல் நீதிபதி சாவந்தின் புகைப்படம் தவறுதலாக ஒளிபரப்பப் பட்டது என்று அறிவித்தது.
செப்டம்பர் 25 அன்று டைம்ஸ் நவ் சேனல் நீதிபதி சாவந்துக்கு பதில் அனுப்புகிறது. அந்த பதிலில் செப்டம்பர் 23 முதல், ஸ்க்ரோலரில், மன்னிப்பு கோரியுள்ளதாக சுட்டிக் காட்டுகின்றனர். டைம்ஸ் நவ் சேனல் எடிட்டர் அர்நப் கோஸ்வாமி அக்டோபர் 1 அன்று நீதிபதி சாவந்துக்கு கடிதம் எழுதி அவரைச் சந்திக்க அனுமதி கோருகிறார். நீதிபதி சாவந்த் அக்டோபர் 10 அன்று மாலை 4 மணிக்கு பூனேவில் உள்ள அவரது இல்லத்துக்கு வரச் சொல்லுகிறார். அக்டோபர் 8 அன்று நீதிபதி சாவந்துக்கு கடிதம் எழுதிய அர்நாப் கோஸ்வாமி, தனக்கு அறுவை சிகிச்சை நடக்க இருப்பதால், தன்னால் அவரை அக்டோபர் 10 அன்று சந்திக்க இயலாது என்று தெரிவிக்கிறார்.
ஆனால் அக்டோபர் 10 அன்று வழக்கம் போல, அர்நாப் கோஸ்வாமி டைம்ஸ் நவ் சேனலில் நியூஸ் அவர் நிகழ்ச்சியை நேரடியாக நடத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். இதற்குப் பிறகே அவர் டைம்ஸ் நவ் சேனலின் மீது 100 கோடி கேட்டு வழக்கு தொடர்கிறார்.
இந்த வழக்கைத் தான், டைம்ஸ் நவ் சேனல், மற்றும் பென்னட் அன்ட் காலமென் நிர்வாகம் பத்திரிக்கைச் சுதந்திரம் பறித்து விட்டதாக கூறுகிறது. ஊழலில் சிக்கிய ஒரு நீதிபதியின் புகைப்படத்திற்கு பதிலாக, மற்றொரு உச்ச நீதிமன்ற நீதிபதியின் புகைப்படத்தை தவறாக வெளியிட்டதற்கு 13 நாட்களாக மன்னிப்புக் கோராமல் அழிச்சாட்டியம் செய்ததற்கு 100 கோடி ரூபாய் வழக்கு போட்டால் பத்திரிக்கை சுதந்திரம் பறி போய் விட்டதாம்.
ஒரு பத்திரிக்கையின் சென்னைப் பதிப்பை மலையாளிகளால் நிரப்பி, செய்திகளை திரித்து, அந்தப் பதிப்பின் அலுவலகத்தில் தமிழர்களை ஓரங்கட்டியதாக செய்தி வெளியிட்டால் அவதூறாம். 100 கோடி ரூபாய் கேட்பார்களாம். கருத்துச் சுதந்திரத்தை பறிக்க முயலும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் முயற்சிகளை முறியடிப்பதில், சவுக்கு தி வீக் என்ட் லீடர் இணைய தளத்தோடு துணை நிற்கும் என்பதை இந்த நேரத்தில் உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறது.
அன்பான சவுக்கு வாசகர்களே… தி வீக் என்ட் லீடரில் வெளியாகியுள்ள அந்தக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பும், ஆங்கில வடிவமும், சவுக்கில் வெளியிடப் பட்டுள்ளது. இதை ப்ளாக் எழுதும் சவுக்கு வாசகர்கள் அத்தனை பேரும், தங்கள் ப்ளாகில் வெளியிட வேண்டும் என்று சவுக்கு அன்போடு கேட்டுக் கொள்கிறது. தங்கள் நண்பர்களிடமும் சொல்லி இதை வெளியிட வையுங்கள். எத்தனை பேரிடம் 100 கோடி கேட்கிறார்கள் என்பதைப் பார்த்து விடுவோம்.
Courtesy: Savukku.
Labels:
செய்திகள்
16 December 2011
பருப்பு உருண்டைக் குழம்பு
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 100 கிராம்
கடலை பருப்பு - 100 கிராம்
புழுங்கலரிசி - 25 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
உப்பு - 3 ஸ்பூன்
தேங்காய் - ஒன்றரை மூடி
வற்றல் மிளகாய் - 12
மல்லிவிதை - 4 ஸ்பூன்
வெங்காயம் - 200 கிராம்
பூண்டு - 12 பல்
இஞ்சி - 1 துண்டு
சோம்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 ஸ்பூன்
செய்முறை :

* பருப்பு இரண்டையும் புழுங்கலரிசியுடன் சேர்த்து இரண்டு மணி நேரம் தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்.
* பருப்பு ஊறிய பிறகு ஒன்றிரண்டாக, கரகரவென்று அரைத்துக் கொள்ளவும்.
* இதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் தேங்காய் ஒரு மூடி துருவிச் சேர்க்கவும்.
* சோம்பையும், மிளகாய் வற்றல் நான்கையும் அரைத்து பருப்போடு போடவும்.
* 200 கிராம் வெங்காயத்தையும் இஞ்சியையும் எட்டு பூண்டு பல்லையும் பொடியாக அரிந்து அதில் சேர்க்கவும். உப்பு 1 ஸ்பூன், கறிவேப்பிலை ஒரு ஸ்பூன் போட்டு பருப்பைக் கையால் நன்றாகக் கிளறி பிசையவும்.
* பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் (பெரிய எலுமிச்சை அளவு) உருட்டவும்.
* இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லித் தட்டில் உருண்டைகளை வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். (இதை அப்படியே சாப்பிடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். இதே பருப்புக் கலவையை சிறு சிறு வடையாக தோசைக் கல்லில் தட்டியும் கொடுக்கலாம். சுவையாக இருக்கும்.)
* அடுப்பில் வாணலியை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெந்தயம் தாளித்து, மீதி அரிந்து வைத்துள்ள வெங்காயம், பூண்டு இவற்றை வதக்கி கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* புளியைக் கரைத்து மஞ்சள் பொடி சேர்த்து அதில் ஊற்றவும்.
* அரை மூடி தேங்காய்த் துருவலுடன் மிளகாய் ஆறு, மல்லிவிதை இவற்றை அரைத்து கொதிக்கும் புளித்தண்ணீரில் ஊற்றவும். குழம்பு நன்றாகக் கொதித்தவுடன் உருண்டைகளை மெதுவாக ஒவ்வொன்றாகக் குழம்பில் போட்டு ஐந்து நிமிடம் கொதித்த பின் இறக்கி வைக்கவும்.
குறிப்பு : பருப்பு உருண்டைகளை வேகவைத்துக் குழம்பில் சேர்ப்பதால் உடையாமல் இருக்கும். குழம்பு உருண்டைகளை விரும்பாத குழந்தைகளுக்கு வேக வைத்த உருண்டைகளைக் கொடுக்கலாம்.
Labels:
சமையல் குறிப்புகள்
முளைக்கீரை ஃப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள் :
பிரியாணி அரிசி - 1 ஆழாக்கு
முளைக்கீரை கட்டு - 3
பெரிய வெங்காயம் - 3
நெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
எலும்பிச்சம் பழம் - 1
முந்திரிப்பருப்பு - 5
தனியா - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
பட்டை - 1 துண்டு
இலவங்கம் - 2
மிளகாய் வற்றல் - 6
தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* கீரையை கழுவி சுத்தம் செய்து வெங்காயம், கீரை இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* அரிசியை பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
* வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா, வெந்தயம், பெருங்காயம், இலவங்கம், பட்டை, மிளகாய் வற்றல் முதலியவற்றை வறுத்து கடைசியில் தேங்காய் துருவலையும் சேர்த்து வறுத்து பொடி செய்யவும்.
* அரிசியை உதிரியாக வேக வைத்து ஆற வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெங்காயம் சேர்த்து மூன்று நிமிடம் கிளறி கீரையை சேர்க்கவும்.
* கீரை வதங்கியதும் அதில் ஆற வைத்த சாதம், உப்பு, மசாலாப் பொடி சேர்த்துக் கலந்து இறக்கி,எலும்மிச்சம்பழச்சாற்றை பிழிந்து விடவும்.
* வறுத்த முந்திரியை மேலே தூவிப் பரிமாறவும்.
Labels:
சமையல் குறிப்புகள்
11 December 2011
”ஆற்காடு வீராசாமி ஒரு வேஸ்ட் லக்கேஜ்”- சொன்னது யார்?
”ஆற்காடு வீராசாமி ஒரு வேஸ்ட் லக்கேஜ்”- சொன்னது யார்?
அனைவருக்கும் வணக்கம்...
முல்லைப் பெரியாறு விவகாரத்தை இரு மாநிலத்தை சரியாக கையாளவில்லை. கே.எல். பதிவு வாகனங்களை அடிப்பதும் அம்மாநிலத்தில் தமிழ்நாடு பதிவு வாகனங்களை அடிப்பதும் சரியான பாதையில்லை. இதே நிலை நீடித்தால், இரு தரப்பில் உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. உடனே, இந்த விவரத்தில் இரு மாநில அரசுகளும் போலீஸும் ரொம்ப கவனத்துடன் அணுக வேண்டும்.
சரி போகட்டும், தி.மு.க. செயற்குழு நிர்வாகக் கூட்டத்துக்கு வருகிறேன். அக்கூட்டம் ரொம்ப சிறப்பாக நடந்தது. முக்கியமாக அழகிரி, கனிமொழி கலந்துக்கல. ஏன் தெரியுமா? அழகிரி பார்லிமென்ட்ல கலந்துக்க போயிட்டாரு. கனிமொழி கோர்ட் கேஸுக்கு போயிட்டாங்க. இதற்கிடையிலே, இரண்டு நாள் கனிமொழி பார்லிமென்ட்ல போயி கூட்டத்துல்ல கலந்துகிட்டாங்க.
வியாழக்கிழமை அன்னிக்கு அழகிரியும், கனிமொழியும் பார்லிமென்ட் லாபில ஒரு 25 நிமிஷம் தனியா நின்று பேசிட்டிருந்தாங்க. பார்லிமென்ட்ல பேசுங்க அப்டின்னு அழகிரிய பார்த்து இனிமே யாரும் கேட்க முடியாது. ஏன்னா? தன் தங்கச்சியோட 25 நிமிஷம் பேசிட்டிருந்தாரு. பார்லிமெண்ட்டுல பேசுங்க. பார்லிமெண்ட்ல பேசுங்க என்று எல்லோரும் சொல்வதை அழகிரி இப்படி எடுத்துக் கொண்டார் போல.
இதைவிட ஒரு பெரிய ஜோக்கு செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு நடந்தது.
செயற்குழு கூட்டத்தில் ஏன் அழகிரி கலந்துக்கொள்ளவில்லை என்று நிருபர்கள் கேட்டதற்கு “ நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய பொறுப்பிருப்பதால் அதைத் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் செயற்குழு கூட்டத்தில் அழகிரி பங்கேற்கவில்லை” என்று கருணாநிதி சொல்லியிருப்பது 2011-ஆம் ஆண்டின் ஈடுஇனையற்ற ஜோக்.
அழகிரி இதுவரை எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லியதாக நான் பத்திரிகையில் படித்ததில்லை. யாரவது அப்படியொரு செய்தியைப் படித்திருந்தால் அப்படியே கத்தரித்து அனுப்பி வைக்கவும்.
இந்த இடத்திலே இன்னொரு வருத்தமான செய்தியை சொல்லியாக வேண்டும். சில நாட்களுக்கு முன்பாக கருணாநிதி அறிவாலயத்திற்கு வந்தபோது வாசலில் ஆற்காடு வீராசாமி நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த கருணாநிதி அடித்த கமென்ட் “ நிக்கறான் பாரு வேஸ்ட் லக்கேஜ்” கருணாநிதியின் கமென்ட்டை கேட்ட மாஜிக்கள் பலருக்கு தூக்கிவாரிப் போட்டது.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கருணாநிதியின் ராஜ விசுவாசியாக , கருணாநிதியின் அரசு பாதுகாவலர்களையும் விட நெருங்கி கருணாநிதியை பாதுகாக்கும் பாதுகாவலர்களில் ஒருவராக, கருணாநிதி எந்த ஊருக்கு சென்றாலும் பின்னாலே ஓடி ஓடி சென்று அவரைப் பாதுகாக்கும் பணியிலும், கருணாநிதியின் கூட்டத்தில் பேச்சாளர்கள் அதிகமாக பேசு நேரத்தை கடத்தாமல், பார்த்திக்கொள்வதிலும் இன்னும் ஏகப்பட்ட பணிகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தவர்தான் ஆற்காடு வீராசாமி. அவருக்கே இந்த கெதியா? என்று மாஜிக்கள் கலங்கினர்.
குடும்ப சண்டையா.... கூப்பிடு வீராசாமியை என்பார் கருணாநிதி. கடைசியில் குடும்பத்தில் பஞ்சாயத்து செய்து, வில்லனாகி கருணாநிதி குடும்பத்தினரே கோபப்படுவார்கள். அதையும் தாங்கிக் கொள்வார் ஆற்காட்டார்.
கட்சி மோதலா... கூப்பிடு வீராசாமியை என்பார். கருணாநிதி என்ன சொல்கிறாரோ அப்படியெல்லாம் பேசி கட்சிகாரர்களை சமாதானப்படுத்தி, இரு தரப்பின் கோபத்தையும் வாங்கிக் கொள்வார் வீராசாமி. அவருக்கே இந்த கெதியா?
இப்படியெல்லாம் தி.மு.க. வினர் வருத்தப்பட்டச் செய்தியைதான் உங்களோடு நானும் பகிர்ந்துக்கொண்டேன்
அடுத்து ஆளுங்கட்சியில் நேற்றும் ஒரு அமைச்சரவை மாற்றம் என்ற காட்சி அரங்கேறியது.
இதில், சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி, சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயமும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக திருப்பூர் ஆனந்தனும், மாஜி அமைச்சர் வளர்மதியும் நேற்று அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர்.
பரஞ்சோதி திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வேகத்திலே மந்திரியானார். மாவட்டச் செயலாளர் ஆனார். அதே வேகத்திலே மந்திரி சபையிலிருந்து போய்விட்டார்.
இவர் வேட்பாளராய் அறிவிக்கப்பட்ட போதே இவர் மீது ஏகப்பட்ட புகார்கள். டாக்டர் ராணி என்பவர் “பரஞ்சோதி என்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்” என்று புகார் கொடுத்தார். அப்படிப்பட்ட நபரை வேட்பாளராக நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் ஜெயித்தபிறகு அமைச்சராக்கி அவர்மீது அதே ராணி கொடுத்த புகாரில் எஃப்.ஐ.ஆர். போட்டதும், அவரை நீக்கியிருப்பதும் சிரிப்பைதான் வரவழைக்கிறது.
இப்படியே இன்னும் எத்தனை முறை அமைச்சர்கள் மாற்றம் இருக்கப்போகிறது என்று இன்னும் நாலரை ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
அமைச்சர்களை மட்டுமா மாற்றுகிறார் முதல்வர் அதிகாரிகளையும் மாற்றிக் கொண்டேயிருக்கிறார்.
உளவுத்துறை டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேல் , இரண்டு மாதங்கள் கூட அங்கே நீடிக்க முடியவில்லை. உளவுத்துறைக்கு சற்றும் பொருந்தாத இவரை இந்தப் பதவியில் அமர்த்தும் முன்பே யோசித்திருக்க வேண்டும். அல்லது உளவுத்துறைக்கு வந்த பிறகாவது பொன்மாணிக்கவேல் தனது குணத்தை மாற்றிக்கொண்டு அடக்கி வாசித்திருக்க வேண்டும். அவரது பேச்சும் செயலுமே அவருக்கு எதிரியாக அமைந்து விட்டது.
ஜாங்கிட்டை பழிவாங்க வேண்டும் என்று மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தால்... அப்புறம் எப்படி உளவுத்துறை வேலை கவனிக்க முடியும்.
சரி.... இந்த முறை வந்திருக்கும் உளவுத்துறை ஐ.ஜி. தாமரைக்கண்ணன்... பொருத்தமானவர் என்று உளவுத்துறையில் பேசிக் கொள்கிறார்கள். பார்ப்போம்..
நன்றி!
வணக்கம்!
Labels:
படித்தவைகள்










