தேவையான பொருட்கள் :
பிரியாணி அரிசி - 1 ஆழாக்கு
முளைக்கீரை கட்டு - 3
பெரிய வெங்காயம் - 3
நெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
எலும்பிச்சம் பழம் - 1
முந்திரிப்பருப்பு - 5
தனியா - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
பட்டை - 1 துண்டு
இலவங்கம் - 2
மிளகாய் வற்றல் - 6
தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* கீரையை கழுவி சுத்தம் செய்து வெங்காயம், கீரை இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* அரிசியை பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
* வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா, வெந்தயம், பெருங்காயம், இலவங்கம், பட்டை, மிளகாய் வற்றல் முதலியவற்றை வறுத்து கடைசியில் தேங்காய் துருவலையும் சேர்த்து வறுத்து பொடி செய்யவும்.
* அரிசியை உதிரியாக வேக வைத்து ஆற வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெங்காயம் சேர்த்து மூன்று நிமிடம் கிளறி கீரையை சேர்க்கவும்.
* கீரை வதங்கியதும் அதில் ஆற வைத்த சாதம், உப்பு, மசாலாப் பொடி சேர்த்துக் கலந்து இறக்கி,எலும்மிச்சம்பழச்சாற்றை பிழிந்து விடவும்.
* வறுத்த முந்திரியை மேலே தூவிப் பரிமாறவும்.





0 comments:
Post a Comment