11 December 2011

”ஆற்காடு வீராசாமி ஒரு வேஸ்ட் லக்கேஜ்”- சொன்னது யார்?


”ஆற்காடு வீராசாமி ஒரு வேஸ்ட் லக்கேஜ்”- சொன்னது யார்?



அனைவருக்கும் வணக்கம்...


முல்லைப் பெரியாறு விவகாரத்தை இரு மாநிலத்தை சரியாக கையாளவில்லை. கே.எல். பதிவு வாகனங்களை அடிப்பதும் அம்மாநிலத்தில் தமிழ்நாடு பதிவு வாகனங்களை அடிப்பதும் சரியான பாதையில்லை. இதே நிலை நீடித்தால், இரு தரப்பில் உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. உடனே, இந்த விவரத்தில் இரு மாநில அரசுகளும் போலீஸும் ரொம்ப கவனத்துடன் அணுக வேண்டும்.


சரி போகட்டும், தி.மு.க. செயற்குழு நிர்வாகக் கூட்டத்துக்கு வருகிறேன். அக்கூட்டம் ரொம்ப சிறப்பாக நடந்தது. முக்கியமாக அழகிரி, கனிமொழி கலந்துக்கல. ஏன் தெரியுமா? அழகிரி பார்லிமென்ட்ல கலந்துக்க போயிட்டாரு. கனிமொழி கோர்ட் கேஸுக்கு போயிட்டாங்க. இதற்கிடையிலே, இரண்டு நாள் கனிமொழி பார்லிமென்ட்ல போயி கூட்டத்துல்ல கலந்துகிட்டாங்க.


வியாழக்கிழமை அன்னிக்கு அழகிரியும், கனிமொழியும் பார்லிமென்ட் லாபில ஒரு 25 நிமிஷம் தனியா நின்று பேசிட்டிருந்தாங்க. பார்லிமென்ட்ல பேசுங்க அப்டின்னு அழகிரிய பார்த்து இனிமே யாரும் கேட்க முடியாது. ஏன்னா? தன் தங்கச்சியோட 25 நிமிஷம் பேசிட்டிருந்தாரு. பார்லிமெண்ட்டுல பேசுங்க. பார்லிமெண்ட்ல பேசுங்க என்று எல்லோரும் சொல்வதை அழகிரி இப்படி எடுத்துக் கொண்டார் போல.


இதைவிட ஒரு பெரிய ஜோக்கு செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு நடந்தது.


செயற்குழு கூட்டத்தில் ஏன் அழகிரி கலந்துக்கொள்ளவில்லை என்று நிருபர்கள் கேட்டதற்கு “ நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய பொறுப்பிருப்பதால் அதைத் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் செயற்குழு கூட்டத்தில் அழகிரி பங்கேற்கவில்லை” என்று கருணாநிதி சொல்லியிருப்பது 2011-ஆம் ஆண்டின் ஈடுஇனையற்ற ஜோக்.


அழகிரி இதுவரை எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லியதாக நான் பத்திரிகையில் படித்ததில்லை. யாரவது அப்படியொரு செய்தியைப் படித்திருந்தால் அப்படியே கத்தரித்து அனுப்பி வைக்கவும்.



இந்த இடத்திலே இன்னொரு வருத்தமான செய்தியை சொல்லியாக வேண்டும். சில நாட்களுக்கு முன்பாக கருணாநிதி அறிவாலயத்திற்கு வந்தபோது வாசலில் ஆற்காடு வீராசாமி நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த கருணாநிதி அடித்த கமென்ட் “ நிக்கறான் பாரு வேஸ்ட் லக்கேஜ்” கருணாநிதியின் கமென்ட்டை கேட்ட மாஜிக்கள் பலருக்கு தூக்கிவாரிப் போட்டது.


இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கருணாநிதியின் ராஜ விசுவாசியாக , கருணாநிதியின் அரசு பாதுகாவலர்களையும் விட நெருங்கி கருணாநிதியை பாதுகாக்கும் பாதுகாவலர்களில் ஒருவராக, கருணாநிதி எந்த ஊருக்கு சென்றாலும் பின்னாலே ஓடி ஓடி சென்று அவரைப் பாதுகாக்கும் பணியிலும், கருணாநிதியின் கூட்டத்தில் பேச்சாளர்கள் அதிகமாக பேசு நேரத்தை கடத்தாமல், பார்த்திக்கொள்வதிலும் இன்னும் ஏகப்பட்ட பணிகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தவர்தான் ஆற்காடு வீராசாமி. அவருக்கே இந்த கெதியா? என்று மாஜிக்கள் கலங்கினர்.


குடும்ப சண்டையா.... கூப்பிடு வீராசாமியை என்பார் கருணாநிதி. கடைசியில் குடும்பத்தில் பஞ்சாயத்து செய்து, வில்லனாகி கருணாநிதி குடும்பத்தினரே கோபப்படுவார்கள். அதையும் தாங்கிக் கொள்வார் ஆற்காட்டார்.



கட்சி மோதலா... கூப்பிடு வீராசாமியை என்பார். கருணாநிதி என்ன சொல்கிறாரோ அப்படியெல்லாம் பேசி கட்சிகாரர்களை சமாதானப்படுத்தி, இரு தரப்பின் கோபத்தையும் வாங்கிக் கொள்வார் வீராசாமி. அவருக்கே இந்த கெதியா?


இப்படியெல்லாம் தி.மு.க. வினர் வருத்தப்பட்டச் செய்தியைதான் உங்களோடு நானும் பகிர்ந்துக்கொண்டேன்

அடுத்து ஆளுங்கட்சியில் நேற்றும் ஒரு அமைச்சரவை மாற்றம் என்ற காட்சி அரங்கேறியது.


இதில், சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி, சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயமும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக திருப்பூர் ஆனந்தனும், மாஜி அமைச்சர் வளர்மதியும் நேற்று அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர்.


பரஞ்சோதி திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வேகத்திலே மந்திரியானார். மாவட்டச் செயலாளர் ஆனார். அதே வேகத்திலே மந்திரி சபையிலிருந்து போய்விட்டார்.


இவர் வேட்பாளராய் அறிவிக்கப்பட்ட போதே இவர் மீது ஏகப்பட்ட புகார்கள். டாக்டர் ராணி என்பவர் “பரஞ்சோதி என்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்” என்று புகார் கொடுத்தார். அப்படிப்பட்ட நபரை வேட்பாளராக நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் ஜெயித்தபிறகு அமைச்சராக்கி அவர்மீது அதே ராணி கொடுத்த புகாரில் எஃப்.ஐ.ஆர். போட்டதும், அவரை நீக்கியிருப்பதும் சிரிப்பைதான் வரவழைக்கிறது.


இப்படியே இன்னும் எத்தனை முறை அமைச்சர்கள் மாற்றம் இருக்கப்போகிறது என்று இன்னும் நாலரை ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.


அமைச்சர்களை மட்டுமா மாற்றுகிறார் முதல்வர் அதிகாரிகளையும் மாற்றிக் கொண்டேயிருக்கிறார்.


உளவுத்துறை டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேல் , இரண்டு மாதங்கள் கூட அங்கே நீடிக்க முடியவில்லை. உளவுத்துறைக்கு சற்றும் பொருந்தாத இவரை இந்தப் பதவியில் அமர்த்தும் முன்பே யோசித்திருக்க வேண்டும். அல்லது உளவுத்துறைக்கு வந்த பிறகாவது பொன்மாணிக்கவேல் தனது குணத்தை மாற்றிக்கொண்டு அடக்கி வாசித்திருக்க வேண்டும். அவரது பேச்சும் செயலுமே அவருக்கு எதிரியாக அமைந்து விட்டது.


ஜாங்கிட்டை பழிவாங்க வேண்டும் என்று மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தால்... அப்புறம் எப்படி உளவுத்துறை வேலை கவனிக்க முடியும்.


சரி.... இந்த முறை வந்திருக்கும் உளவுத்துறை ஐ.ஜி. தாமரைக்கண்ணன்... பொருத்தமானவர் என்று உளவுத்துறையில் பேசிக் கொள்கிறார்கள். பார்ப்போம்..


நன்றி!


வணக்கம்!

0 comments:

Post a Comment